Tuesday, April 24, 2007

125. ஆசையக் காத்துல தூது விட்டு

என்ன ஒரு துள்ளிசைப் பாடல்! வரிகளில் சொல்லிக்கொள்வதைப் போல் எதுவும் இல்லை. 7ஜி ரெயின்போ காலனி திரைப்படம் வந்த பிறகு இந்தப்பாடல் மேலும் பிரபலம் அடைந்துவிட்டது. வித்தியாசமான ஒரு குரலுக்குச் சொந்தக்காரரான S.P.ஷைலஜா நன்றாகவே பாடி இருக்கிறார்.
------------------------------------------
படம் : ஜானி
இசை : இளையராஜா
வரிகள் : கங்கை அமரன்
குரல் : S.P.ஷைலஜா
------------------------------------------
ஆசையக் காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
சேதியக் கேட்டொரு ஜாடை தொட்டு
பாடுது பாட்டு ஒன்னு - குயில்
கேக்குது பாட்ட நின்னு
(ஆசைய)
வாசம் பூவாசம் வாலிபக் காலத்து நேசம்
மாசம் தை மாசம் மல்லிக பூமணம் வீசும்
நேசத்துல, வந்த வாசத்துல,
நெஞ்சம் பாடுது சோடியத் தேடுது
பிஞ்சும் வாடுது வாடையில
கொஞ்சும் ஜாடையப் போடுது, பார்வையும்
சொந்தம் தேடுது மேடையில
(ஆசைய)
தேனோ பூந்தேனு, தேன்துளி கேட்டது நானு
மானோ பொன்மானு தேயில தோட்டத்து மானு
ஓடிவர, உன்னத் தேடிவர,
தாழம்பூவுல தாவுற காத்துல
தாகம் ஏறுது ஆசையில
பார்க்கும்போதுல ஏக்கம் தீரல
தேகம் வாடுது பேசையில
(ஆசைய)

1 Comments:

Blogger Unknown சொல்கிறார்.....

80- களில் இளையராஜாவால் இரு இனிய இசை மலர்கள் அறிமுகமானார்கள். அதில் ஒருவர் ஜென்சி மற்றவர் SP.ஷைலஜா. இவர்கள் இருவரின் குரல்களில் வித்தியாசமான
ரசனை உண்டு.
ஜென்சி பாடிய............என் வானிலே ஒரே வெண்ணிலா .....................
ஷைலஜா பாடிய ....மலர்களில் ஆடும் இளமை புதுமையே ...................
இரண்டு பாடல்களும் வித்தியாசமான இனிமைதான் . இருவரின் குரல்களில் ஒரு குழைந்தை தனம் இருக்கும் .
இருவரும் சேர்ந்து பாடிய ... ஆயிரம் மலர்களே மலருங்கள் .............பாடலும் இனிமைதான்
இவ் ஆயிரம் மலர்களே மலருங்கள் பாடலில் ..............
ஆரம்ப ஹம்மிங் SP . ஷைலஜா ஹா ஹா ..........என்று பாட தொடர்ந்து ஜென்சி ஆயிரம் மலர்கள் ...........என்று பாட அழகாக இருக்கும் . தொடர்ந்து ஜென்சி ...வானில்லே வெண்ணிலா .................என்று பாடுவார் .அதை தொடர்ந்து அடுத்த சரணம் SP .ஷைலஜா
கோடையில் மழைவரும் வசந்த காலம் ....................என்று பாடி முடிப்பார் . இருவரின் குரல்களும் இரு வேறு இனிமை
80 - களில் வானொலியில் ஜென்சி , ஷைலஜா பாடல்கள் வலம் வந்ததை மறக்க முடியவில்லை. இப்பொழுது கேட்கும் பொழுது பசுமை . காலத்தால் அழியாத இரு இசை குரல்கள் ஜென்சி , SP.ஷைலஜா
சமீபத்தில் நண்பிகளான ஜென்சி யும் SP.ஷைலஜா வும் - "இரு பறவைகள் "

July 22, 2013 1:20 AM  

Post a Comment

<< Home