Tuesday, April 24, 2007

126. சப்தமில்லாமல் ஒரு காதல் சங்கீதம்

ஆர்ப்பாட்டமான பாடல்களையே பாடிப் புகழ் பெற்ற L.R.ஈஸ்வரிக்கு, ஒரு வித்தியாசமாக அமைந்து புகழைக் கொடுத்த பாடல் இது. இவரது குரலை நான் ரசிக்க ஓர் ஆரம்பமாக அமைந்ததும் இப்பாடல்தான். வரிகள் அற்புதம். ஏதுமறியாத பெண்மையின் நிலையை அப்படியே கண்முன் கொண்டுவருகிறார் கவிஞர். இசை அருமை!
--------------------------------------
படம் : வெள்ளிவிழா
இசை : M.S.விஸ்வநாதன்
வரிகள் : கண்ணதாசன்(?)
குரல் : L.R.ஈஸ்வரி
--------------------------------------
காதோடுதான் நான் பாடுவேன்
மனதோடுதான் நான் பேசுவேன்
விழியோடுதான் விளையாடுவேன்
உன்மடிமீதுதான் கண் மூடுவேன்
(காதோடுதான்)
வளர்ந்தாலும் நானின்னும் சிறுபிள்ளைதான்
நான்அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான்
உனக்கேற்ற துணையாக எனை மாற்ற வா?
குலவிளக்காக நான் வாழ வழி காட்ட வா
(காதோடுதான்)
பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது
நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது
எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது
இதில்யார் கேட்டு என் பாட்டை முடிக்கின்றது?
(காதோடுதான்)

0 Comments:

Post a Comment

<< Home