Tuesday, April 24, 2007

127. இந்த பந்தம், ராக பந்தம்!

என்ன அற்புதமான காதல் வரிகள். தொடர்ந்து பெய்யும் வைரமுத்துவின் கவிதை மழையில் ஒரு துளி! இசை நம்மை எங்கோ இட்டுச் செல்கிறது. ஜானகியின் குரலில் விரகம் ஒலிக்கிறது. எனக்குப் பிடித்த வரிகள்,
"விலகிப் போனால் எனது சலங்கை விதவையாகிப் போகுமே!"
"இசையை அருந்தும் சாதகப்பறவை போல நானும் வாழ்கிறேன்
உறக்கமில்லை எனினும் கண்ணில் கனவு சுமந்து போகிறேன்"

"வெந்நீரில் நீராடும் கமலம், விலகாது விரகம்!"
---------------------------------------
படம் : காதல் ஓவியம்
இசை : இளையராஜா
வரிகள் : வைரமுத்து
குரல் : S.ஜானகி
---------------------------------------
தாநம் தம்த தாநம் தம்த தாநம் தம்த தாநம்
பந்தம் ராக பந்தம் உந்தன் சந்தம் தந்த சொந்தம்
ஓலையில் வேறென்ன சேதி? தேவனே நானுந்தன் பாதி!
இந்த பந்தம் ராக பந்தம் உந்தன் சந்தம் தந்த சொந்தம்

நாதம் என் ஜீவனே! வா வா என் தேவனே!
உந்தன் ராஜ ராகம் பாடும் நேரம் பாறை பாலூறுதே!
பூவும் ஆளானதே!
(நாதம்)
அமுத கானம் நீ தரும் நேரம், நதிகள் ஜதிகள் பாடுமே!
விலகிப் போனால் எனது சலங்கை விதவையாகிப் போகுமே!
கண்களில் மௌனமோ? கோயில் தீபமே!
ராகங்கள் பாடிவா பன்னீர் மேகமே!
மார்மீது பூவாகி விழவா? விழியாகி விடவா?
(நாதம்)
இசையை அருந்தும் சாதகப்பறவை போல நானும் வாழ்கிறேன்
உறக்கமில்லை எனினும் கண்ணில் கனவு சுமந்து போகிறேன்
தேவதை பாதையில் பூவின் ஊர்வலம்
நீயதில் போவதாய் ஏதோ ஞாபகம்
வெந்நீரில் நீராடும் கமலம், விலகாது விரகம்!
(நாதம்)

0 Comments:

Post a Comment

<< Home