Tuesday, April 24, 2007

128. காவேரியாய்ப் பொங்குகிற மனது பாடுகிறது

பாரதிராஜா, இளையராஜா கூட்டணியில் உருவான பாடல். கிராமிய மணம் கமழ, ஒரு வெள்ளந்திப் பெண்ணின் காதலைச் சொல்கிறார் கங்கை அமரன். ஜானகியின் குரல் எல்லா வகையான பாடல்களுக்கும் பொருந்தியிருப்பது ஒரு சிறப்பம்சம்.
----------------------------------------
படம் : கிழக்கே போகும் ரயிலு
இசை : இளையராஜா
வரிகள் : கங்கை அமரன்
குரல் : S.ஜானகி
----------------------------------------
பூவரசம்பூ பூத்தாச்சு
பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போல பொங்குற மனசு பாடாதோ?
(பூவரசம்பூ)
தூது போ ரயிலே ரயிலே!
துடிக்குதொரு குயிலே குயிலே
என்னென்னவோ என் நெஞ்சிலே!
(தூது)
பட்டணம் போனா பார்ப்பாயா?
பாத்தொரு சங்கதி கேப்பாயா?
கிழக்கே போகும் ரயிலே நீதான் எனக்கொரு தோழி
தூது போவாயோ?
(பூவரசம்பூ)
நடப்பதோ மார்கழி மாசம்,
தையிலே நிச்சயதார்த்தம்
நாதஸ்வரம் மேளம் வரும்
(நடப்பதோ)
நெதமும் நெல்லுச் சோறாக்கி நெத்திலி மீனு குழம்பாக்கி
மச்சான் வந்தா ஆக்கிக்கொடுப்பேன்,
மாருல சாஞ்சு புதையலெடுப்பேனே!
(பூவரசம்பூ)
கர கர வண்டி காமாட்சி வண்டி,
கிழக்கே போறது பொள்ளாச்சி வண்டி...ஓ!

நாளெல்லாம் ஏங்கிக்கிட்டிருக்கேன்,
சாமிக்கு வேண்டிக்கிட்டிருக்கேன்
தூக்கமில்ல... காத்திருக்கேன்
வீரபாண்டிக் கோயிலிலே, வருகிற தைப்பொங்கலிலே
வேண்டினபடியே பொங்கலும் வைப்பேன்,
கேட்டதை எல்லாம் கொடுக்கிற சாமிக்கு
(பூவரசம்பூ)

0 Comments:

Post a Comment

<< Home