Wednesday, April 25, 2007

129. என் வானிலே, ஒரே வெண்ணிலா

இடைக்காலங்களில் மிக அருமையான பாடல்களைப் பாடியவர் இந்த ஜென்ஸீ. என்ன காரணத்தாலோ இவரது இசைப் பயணம் தொடராமல் போனது. அழகான மெட்டில் உருவான பாடல் இது. கேட்டுக்கொண்டே இருக்கலாம் எனும்படியான பாடல். இசையின் ராஜாவின் மகுடத்தில் இன்னுமொரு சிறகு.
------------------------------------------
படம் : ஜானி
இசை : இளையராஜா
வரிகள் : ?
குரல் : ஜென்ஸீ
------------------------------------------
என் வானிலே, ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள், கவிதை தாரகை ஊர்வலம்
(என்)
நீரோடை போலவே என் பெண்மை
நீராட வந்ததே என் மென்மை
(நீரோடை)
சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே
வார்த்தைகள் தேவையா?...ஆ....!
(என்)
நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்
நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம்
(நீ தீட்டும்)
இரண்டு நதிகளும் வரும் இரண்டு கரையிலே
வெள்ளங்கள் ஒன்றல்லவா?...ஆ....!
(என்)

1 Comments:

Blogger Raj Chandra சொல்கிறார்.....

My favourite too..not for Jency's voice, but for the fusion Illayaraja created in this piece, especially, in the second part when he preludes with flute and when it ends, the violin chorus starts. Truly western and eastern combination...

Brings the feeling of walking in the open space when the summer sun sets...

April 30, 2007 10:45 AM  

Post a Comment

<< Home