Monday, August 13, 2007

133. புரியாத ஆனந்தம்!

இலேசாக இருள் படர்ந்த ஒளியில் படமாக்கப்பட்டிருக்கும் இந்தப்பாடல், காதல் உணர்ச்சி மேலிடும் பெண்மையின் வெளிப்பாடாக அமைந்திருக்கிறது. S.ஜானகியின் குரல் உண்மையிலேயே ஒரு வரப்பிரசாதம்தான். எந்த உணர்ச்சியையும் முகத்தில் காட்டாமல் அவர் பாடும் அழகே அழகு! இசையும், வரிகளும் கூட இரம்மியமாக இருக்கின்றன. அனுபவம் என்பது அதிகமில்லாத நிலையிலேயே இப்படி ஒரு படத்தைத் தந்த மணிரத்னம் பாராட்டப்பட வேண்டியவர்தான்.
-------------------------------------------
படம் : மௌனராகம்
இசை : இளையராஜா
வரிகள் : வாலி
குரல் : ஜானகி & குழு
-------------------------------------------
பெ:
சின்னச் சின்ன வண்ணக்குயில்
கொஞ்சிக் கொஞ்சிக் கூவுதம்மா
புரியாத ஆனந்தம், புதிதாக ஆரம்பம்
புரியாத ஆனந்தம், புதிதாக ஆரம்பம்
பூத்தாடும் தேன்மொட்டு நானா? நானா?
(சின்ன)
பெ:
மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக்கொண்டேன்
மன்மதன் பாடல் ஒன்றை நெஞ்சுக்குள் பாடிக்கொண்டேன்
சொல்லத்தான் எண்ணியும் இல்லையே பாஷைகள்
என்னவோ ஆசைகள் எண்ணத்தின் ஓசைகள்
மாலை சூடி,
கு:
ம்....ம்....ம்.....
பெ:
மஞ்சம் தேடி
கு:
ம்.....ம்....ம்......
பெ:
மாலை சூடி,
கு:
ம்....ம்....ம்.....
பெ:
மஞ்சம் தேடி
கு:
ம்...ம்....ம்......
பெ:
காதல் தேவன் சந்நிதி காண..காணக்காண...காண
(சின்ன)
பெ:
மேனிக்குள் காற்று வந்து மெல்லத்தான் ஆடக்கண்டேன்
மங்கைக்குள் காதல் வெள்ளம் கங்கை போல் ஓடக்கண்டேன்
இன்பத்தின் எல்லையோ இல்லையே இல்லையே!
அந்தியும் வந்ததால் தொல்லையே தொல்லையே!
காலம் தோறும்
கு:
ம்.....ம்.....ம்....
பெ:
கேட்க வேண்டும்
கு:
ம்....ம்......ம்....
பெ:
காலம் தோறும்
கு:
ம்.....ம்.....ம்....
பெ:
கேட்க வேண்டும்
கு:
ம்....ம்......ம்....
பெ:
பருவம் என்னும் கீர்த்தனம் பாட..பாடப்பாட...பாட...
(சின்ன)

0 Comments:

Post a Comment

<< Home