Monday, December 11, 2006

105. தமிழோடு இசை(க்)காதல்

எந்தவொரு இசை நிகழ்ச்சியிலும் கண்டிப்பாக இடம்பெறக்கூடிய ஒரு பாடல் இது. வைரமுத்துவின் வரிகளுக்கு மெருகேற்றியிருக்கிறார் இளையராஜா. S.P.Bன் குரல் காதுக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கும். காதல் கொள்ளாதவரையும் மயக்கக்கூடிய ஒரு பாடல். எனக்குப் பிடித்த வரிகள்,
"விழி இல்லை எனும் போது வழி கொடுத்தாய்,
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்"
----------------------------------------------------------
படம் : காதல் ஓவியம்
இசை : இளையராஜா
வரிகள் : வைரமுத்து
குரல் : S.P.பாலசுப்ரமணியம்
----------------------------------------------------------
சங்கீத ஜாதி முல்லை, காணவில்லை!
கண்கள் வந்தும் பாவை இன்றி பார்வை இல்லை!
ராகங்கள் இன்றி, சங்கீதம் இல்லை!
சாவொன்று தானா நம் காதல் எல்லை?
என் நாதமே... வா........!
(சங்கீத)
திருமுகம் வந்து பழகுமோ?அறிமுகம் செய்து விலகுமோ?
விழிகளில் துளிகள் வடியுமோ?அது சுடுவதைத் தாங்க முடியுமோ?
கனவினில் எந்தன் உயிரில் உறவாகி,
விடிகையில் இன்று அழுது பிரிவாகி,
தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ?
திரைகள் இட்டாலும் மறைந்து கொள்ளாது!
அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது!
பொன்னி நதி.. கன்னி நதி.. ஜீவ நதி...!
விழிகள் அழுதபடி, கரங்கள் தொழுதபடி,
சிறைகளும் பொடிபட வெளி வரும் ஒரு கிளி,
இசை என்னும் மழை வரும், இனி எந்தன் மயில் வரும்!
ஞாபக வேதனை மீறுமோ!
ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள்
ஆடிடுமோ!ஆடிடுமோ! ஆடிடுமோ! ஆடிடுமோ....!

ராஜ தீபமே!
எந்தன் வாசலில் வாராயோ?
குயிலே...! குயிலே...!
உந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும்,
ராஜ தீபமே!

நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு அவள் நீதானே... நீதானே!
மனக்கண்ணில் நின்று பல கவிதை தந்த மகள் நீதானே... நீதானே.. நீதானே!
விழி இல்லை எனும் போது வழி கொடுத்தாய்,
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்?
நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்!
சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம்!
தத்திச் செல்லும் முத்துச் சிற்பம்,
கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம்!
இன்னும் என்ன நெஞ்சில் அச்சம்?
கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம்!
முல்லைப் பூவில் முள்ளும் உண்டோ?
கண்டு கொண்டும் இந்த வேடம் என்ன?
ராஜ தீபமே!